வரும் ஞாயிறு 8.1.17 அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் வைகுண்ட ஏகாதசி வெகு சிறப்பாக அனுசரிக்கப்படும். இந்த ஆண்டு வரும் வைகுண்ட ஏகாதசிக்கு பல ஜோதிட சூட்சும சிறப்புகள் உண்டு. ஆகவே, அந்நாளில் பூரண உபவாசம் இருந்து பெருமாளை வணங்கி ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் கூறியோ, கேட்டோ வருதல் மிகுந்த அற்புத பலன்களை தரும். முடியாதோர், ஸ்ரீ ராம நாமம் கூறிவரலாம்.

இந்நாளில், இரவை கழிக்க திரைப்படம் சென்றோ, டீவியில் நேரத்தை கழிப்பதோ அல்லாமல், சுந்தர காண்டம், ராமாயணம், பகவத் கீதை, பாகவதம் போன்றவற்றை படித்து வர வாழ்வில் வசந்தம் வீசும். அடுத்து வரும் நம் சந்ததியினருக்கும் இவற்றை பழக்க நல்லதொரு சந்தர்ப்பம். 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!