பொதுவாக சில ஜோதிடர்கள்  'பூர்வ புண்ய ஸ்தானம் அல்லது மந்த்ர ஸ்தானம்' என்றழைக்கப்படும் ராசிக்கு ஐந்தாம் இடத்தை வைத்து நமக்கு உகந்த தெய்வம் எது என்பதை கூறும் வழக்கம் ஒன்று உண்டு. இது ஓரளவே சரியாக வரும். ஆத்மகாரகனின் நிலையை நவாம்சத்தில் அலசிய பின்பே சரியான தேவதை அல்லது தெய்வம் எது என்பதை கணித்தல் நலம் தரும். ஏன் எல்லா கடவுளையும் வழிபடுதல் கூடாதா என்று கேள்வி எழுப்புவோர்க்கு, நம் பதில், அவரவருக்கு  பூர்வ ஜென்மத்தில் தாங்கள் வழிபட்ட தெய்வங்கள், அல்லது நம் விதிப்படி நமக்கு நன்மை தரக்கூடிய ஆற்றல் சக்தி எந்த தெய்வீக சக்தியிடம் உள்ளது என்பதை அறிந்து அதன்படி வழிபட வேண்டும் என்பதே.

என்ன தான், பணம் இருந்தாலும், வியாபாரம் அல்லது தொழில்கள் இருப்பினும், நமக்கு நன்மை தரும் தொழில் அல்லது வியாபாரம், நமக்கு வெற்றியை தரக்கூடிய கல்வி முறை என சரியானவற்றை தேர்ந்து, அதன் படி நடந்தோமேயானால், நடக்கும் கோட்சார பலன்கள் அல்லது தசை புத்தி பலன்கள் கேடு விளைவிக்க கூடிய நிலையில் இருப்பினும், அவற்றை சுலபமாக கடந்தேறிவிடலாம். இத்தகைய மாபெரும் பொக்கிஷத்தை நமக்கு தந்திருப்பது தான் ஜோதிஷம் என்ற அறிய கலை. இதில் நாம் கடைபிடித்து வரும்  தாந்த்ரீக ஜோதிஷத்தை பொறுத்தவரை, எந்த கடவுள் சக்தி நமக்கு அருள் தரும் என்பதை தேர்ந்தெடுத்து அவற்றிக்கு தாந்த்ரீக முறையிலான மந்திர பூஜா முறைகளை கொடுத்து வரும் காரணத்தினாலே, பலன்கள் விரைவாகவும், இரட்டிப்பாகவும் கிடைத்து வருகிறது.

நாம் தற்போது கொடுத்து வரும் 'அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள்' ரிப்போர்ட்டில் ஒருவருக்குரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வம் அல்லது தேவதை, அதன் தாந்த்ரீக மந்திரங்கள், வழிபட வேண்டிய நாட்கள் மற்றும் நேரம், எப்படி எளிதான அதே சமயம் அதீத சக்தியை கொடுக்கும் படி வழிபட வேண்டும் என்ற விவரங்கள் இடம் பெறும்.

ஹரி ஓம் தத் சத்

ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com


Post a Comment

Previous Post Next Post

Get in touch!