நேரம் : மாலை 4:30 மணி முதல்
இடம் : சங்கர மடம், தி.நகர்,சென்னை
நிவேதன அன்னம் : மாலை 8:15 மணி முதல்
சங்கல்ப பிரசாதமாக அனைத்து துயரங்களையும் தீர்க்கும் சண்டி தேவியின் டாலர் வழங்கப்படும்.
மஹாகாளிக்கு மயானக்கொள்ளை நடக்கும் இந்த நாளில்-மாசி அமாவாசையில் சண்டி ஹோமம் மிக அதீத சக்தி வாய்ந்ததும், பலன்களை கொடுப்பதும் ஆகும்.
இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு சண்டீஸ்தவத்தை கேட்போர், செய்வோர் தனம்,தான்யம், புகழ், பிள்ளைகள், பேரன்கள் மற்றும் ஆரோக்யத்துடன் பல காலம் பெரு வாழ்வு வாழ்வர் என்கிறது சாக்தசாஸ்த்ரம். சண்டியை உபாசிப்போருக்கு உண்டாகும் பலன்களை ப்ரம்மாவினாலும் விளக்கி கூற இயலாது என்கிறது சாக்ததந்த்ர சாஸ்திரம்.
தீர்க்கமுடியாத பிரச்சனைகள், மனக்கவலைகள், துயரங்கள் அனைத்தும் மேற்சொன்ன சண்டி ஹோமத்தில் கலந்து கொள்வதினால் தீரும் என்பது உறுதி.
முக்கிய குறிப்பு: சங்கல்பம் செய்து கொள்ள விரும்புவோர், கலச அபிஷேகம் செய்து கொள்ள விரும்புவோர், விஷேச சங்கல்பம் செய்து கொள்ள வேண்டுவோர், முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளவும். மேல் விவரங்கள் தேவைப்படின் முந்தைய பதிவுகளை காணவும்.
அமாவாசை தினத்தில் அன்னதானம் செய்வது, சண்டி தேவியை மட்டும் அல்ல, நம் முன்னோர்களின் ஆசியையும் முழுதாக பெற்று தரக்கூடிய ஒன்று. அன்னதானத்திற்கு உபயம் செய்ய விரும்புவோர், தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
+919840130156 / +918754402857