வைகாசி தசமி
மேற்கூறிய நாளில் காலை பத்து மணிக்கு மேல், தத்தாத்ரேயரின் படத்தை வைத்து நெய் தீபம் ஏற்றி வணங்கி, நிவேதனம் ஏதேனும் செய்து வழிபட நன்று. இந்த நாளில் நாம் காணும் நாய்,பூனை,காக்கை,புறா, பசு,எருமை,குதிரை,குரங்கு,யானை என எவற்றிற்கெல்லாம் உணவு கொடுக்க முடியுமோ, கொடுக்க, நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பல்வேறு பாபங்களால் விளையும், விளைந்த தீமைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். மேலும், இந்நாளில் அசைவம் தவிர்ப்பது மிக மிக அவசியம். செடிகள் மற்றும் மரங்களின் வேர்களுக்கு நீர் ஊற்றுவது இந்நாளில் செய்தால் அதன் பலன் பன் மடங்கு. அதி முக்கியமாக, வாழ்வின் மாய இருள் அகன்று, நல் வெளிச்சம் கிட்டிட, இந்நாளில், தாங்கள் குருவாக ஏற்று கொண்டவரை வணங்கி ஆசிபெறுவது ஆகச்சிறந்த செயலாக அமையும்.
ஹரி ஓம் தத் சத்
தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com