தாரா தேவியானவள் (நயன்தாரா அல்ல) தச மஹா வித்யையில் வரும் இரண்டாவது தேவி ஆவார்.பலர் தற் காலத்தில் நினைப்பது போல் புத்த மதத்தை சார்ந்த கடவுள் அல்ல அவர். பெற்ற தாயின் கருணை உள்ளத்தை கொண்ட தாரா தேவி கிரகங்களில் வியாழனுக்கு உரியவர். ஆடி மாதத்தில் வரும் வியாழன் துவங்கி இவரை வழிபடுவதற்கு சர்வ நிச்சயம் குரு அருள் மற்றும் பூர்வ ஜென்ம ஆன்மீக தொடர்பு தேவை.மணிப்பூரக சக்கரத்தை உடலில் சமன் செய்யும்,தூண்டும் சக்தி கொண்டது தாரா தேவி வழிபாடு.தசாவதாரத்தில் ராமனின் சக்தியையும் அவதாரத்தையும் கொண்ட சாக்த தேவி தாரா தேவி ஆகும். (ராமன் கிரகங்களில் சூரியனை குறிப்பவர் ஆகும்-தாரா தேவியானவள் கிரகங்களில் வியாழனை குறிப்பவர் ஆகும்)ஜாதகத்தில் குரு அருள் பலம் மிகுந்ததாகவும் பரிபூர்ணமாகவும் இருப்பின் வேறு எவ்வகை கிரகங்கள் கெட்டிருந்தாலும் பயப்படத்தேவையில்லை. இதையே முன்னோர்கள் தகுந்த குருவின் அருட்பார்வை நமக்கு இருக்க வாழ்வில் முன்னேற்றம் உறுதி என்றனர்.அன்னையின் கோவில் சிம்லாவில் உள்ளது. மேலும் இவரை பற்றி பல விஷயங்களை அற்புதங்களை உங்களுக்கு வழங்க எண்ணம். அன்னையின் அருளாசி இருப்பின் அது விரைவில் சாத்தியமாகும்.
தாரா தேவியை க்ரீன் (பச்சை) தாரா, நீல தாரா, வெள்ளை தாரா என பலவிதங்களில் பௌத்த,மங்கோலிய,திபெத்திய மக்கள் வழிபடுவது உண்டு.இங்கே கொடுக்கப்பட்டுள்ளது பச்சை தாராவின் மந்திரம் எனினும் தாரா தேவியை வியாழன் துவங்கி வழிபடுவது தான் நன்று. மூல மந்திரம் இந்த தேவியின் பரிபூர்ண ஆசியை பெற்ற பின் கூறி உபாசனை செய்வது தான் நல்லது. அதை பின்னொருமுறை இந்த இணையதள பக்கத்தில் வெளியிடுகிறோம். கீழ்கண்ட மந்திரம் பல்வேறு வகைகளில் மாற்றங்களையும் வாழ்வில் திருப்பங்களையும் ஏற்படுத்த வல்லது. மேலும் வழிபாடு பற்றி அறிய கீழ்கண்ட வீடீயோவை காணவும்.
மந்திரம் : ஓம் தாரே துத்தாரே தூரே சோஹா
வேறொரு மந்திரம் : ஓம் தாரா தேவியை நமஹ
மேலும் அறிய ஆடி வியாழன் அழைத்ததும் ஓடி வரும் அம்மன் வழிபாடு