நம் முன்னோர்களை-பித்ருக்களை சரிவர பூஜிக்காதது, தர்ப்பணம் கொடுக்காமல் இருப்பது போன்ற செயல்கள் மட்டுமே நாம் எத்தகைய பரிகாரங்களை செய்து வரினும், துன்பங்கள் மாறாது பெருகுவதற்கு உண்டான காரணம். அப்படி இத்தனை நாட்கள் இருந்திருப்பினும், அவை அனைத்தையும் போக்கும் வண்ணம் ஒரு பரிகாரம் உள்ளது. அவசியம் செய்து பயன் அடையவும்.
மஹாளய அமாவாசை அன்று ஐந்து தேங்காய்களை மாலையாக நூலினால் கட்டி, (குடுமியுடன்) நீர் நிலைகள் (ஆறு,ஏறி,குளம்,கடல்) உள்ள இடத்திற்கு சென்று, பித்ருக்களை மனதார பூஜித்து, அவர்களிடம் ஆசி வேண்டி, பின், அந்த மாலையை நீர் நிலைகளில் விட்டு விடவும்- மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பின்.
எளிமையாக தோன்றினாலும், பல் வேறு அதிசயங்களை உடனுக்குடன் கொடுக்கவல்லது இந்த பரிகாரம். தேவை,பித்ருக்களிடத்தில் நெஞ்சம் நிறைந்த அன்பும், மரியாதையும் மட்டுமே.
ஆண் பெண் இரு பாலரும் செய்யலாம். இறைவன் கொடுப்பதை விட முந்தி கொண்டு நமக்கு ஆசி வழங்கும் சக்தி பெற்றோர் நம் பித்ருக்கள் என்பதனை மறந்து விட வேண்டாம்.
ஹரி ஓம் தத் சத்
ருத்ர பரிஹார் ரக்ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857