நவமி அன்று மாலை ஆறு முதல் ஏழு மணிக்குள் தானாக விழுந்த அரச மர
இலைகள் 11 எடுத்துக் (இலைகளை எந்த நேரத்திலும் எடுக்கலாம்) கொண்டு
அதில் சந்தனத்தினால் 'ராம்' என்ற ராம மந்திரம் எழுதி (ஒவ்வொரு இலையிலும் ஒரு முறை எழுதினால் போதுமானது) அதை மாலையாக நூல் கொண்டு கட்டி ஆஞ்சநேயர் படத்திற்கு இட்டு, முடிந்தவர்கள் சுந்தர காண்டத்தின் 'ராமர் பட்டாபிஷேக' சர்கம் படித்து பாயசம் அல்லது பானகம் நிவேதனம் செய்து வழிபட அனைத்து குடும்ப கஷ்டங்களும் விலகி நன்மைகள் பெருகும். படிக்க முடியாதவர்கள் படத்தின் முன் அமர்ந்து ஆஞ்சனேயரை பார்த்தவாறு 108 முறை ராம நாமம் கூறி பின்பு நிவேதனம் செய்து முடிக்கலாம். பலன் நிச்சயம்.