நாளை 28.12.16 வீர பக்த ஹனும
னின் ஜெயந்தி நாள். இந்நாளில் ஹனுமனை இலுப்பெண்ணை தீபம் சிகப்பு திரி கொண்டு ஏற்றி வழிபட, வாழ்வின் அனைத்து தடைகளும் நீங்கும். சுந்தரகாண்ட பாராயணம் அல்லது சீதாராம பட்டாபிஷேக சர்கம் படிப்பது அளவற்ற நற்பயன்களை தரும். அப்படி படிக்கும் இடத்தில் ஹனுமன் நேரில் வந்து அமர்ந்திருந்து படிப்பதை கேட்பார் என்பது வெறும் ஐதீகம் மட்டுமல்ல, பலரின் அனுபவமும் கூட. வசதிப்பட்டால் குரங்குகளுக்கு செவ்வாழைப்பழம் கொடுப்பதும், குரங்குகளுக்கு கொடுக்க முடியாதோர் மாடுகளுக்கு கொடுப்பதும், நற்பலன்களை சேர்க்கும்.
ராம ராம சீதா ராம
ஹரி ஓம் தத் ஸத்