கீழ்கண்ட மஹா மருத்யுஞ்சய மந்திரத்தை பற்றி, உடல் கோளாறுகள் நீங்க மற்றும் வாழ் நாளை நீடிக்க என தான் பலரும் நினைத்து கொண்டுள்ளனர். தம்பதியரின் பிரச்சனைகளை நீக்கக்கூடிய எளிய சக்தி வாய்ந்த மந்திரம் இது. தினசரி 108 முறை குளித்தவுடன் ஜெபித்து வர, தம்பதியர் பிரச்சனைகள் பறந்தோடும். உச்சரிக்க காணொளி கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் முதலில் வரும் காயத்திரி மந்திரம் இல்லாமல், கீழ்கண்ட வகையில் கூறி வந்தாலும் பலன் நிச்சயம்.