எத்தனையோ வழிகளை கடைப்பிடித்தும், பண வளம் பெற பல "மணி தெரபி" முறைகள் செய்தும், பண பிரச்சனைகள் இருந்து கொண்டே இருப்பதாகவும், அவற்றை ஈடு கட்ட முடியாமல் கடன் சுமைகள் ஏறி கொண்டே போகிறது எனவும் பலர் என்னிடம் குறை பட்டுக்கொள்வதுண்டு. இதற்கு அடிப்படையில் இரு காரணங்கள் உள்ளன. எந்த ஒரு முறையையும் முழுதாக கடைபிடிக்காது, பாதியில் நம்பிக்கை இழந்து விட்டு விடுவது. மற்றொன்று, பல மணி தெரபி முறைகள் வெறும் எண்ணங்களை மட்டுமே மூலதனமாக கொண்டு கற்பிக்கப்படுகிறது (நாம் அப்படி செய்வதில்லை), அதுவும் தோல்விக்கு ஒரு காரணம், ஏனெனில் நாம் இந்த சமூகத்தில் பலர் சூழ வாழ்ந்து வரும் பட்சத்தில், எதிர் மறை எண்ணங்களுடன் இருப்போருடன் சேர்ந்து தான் சில காரியங்களை செய்ய வேண்டியுள்ளது. ஏன், நம் வீட்டிலேயே அது போன்ற நபர்கள் இருக்கலாம். அப்படி என்றால் இதற்கு என்ன தீர்வு?
நம் உடலில் உள்ள எழுபத்திரெண்டாயிரம் நாடிகளிலும், படியும் வண்ணம், தனத்தை அள்ளித்தரும் அந்த மஹாலக்ஷ்மி தேவியின் ஆற்றலை கொண்டு சேர்ப்பது மட்டுமே வாழ் நாள் முழுதும் பயன் தரும். அந்த நிலையை அடையும் வைராக்கியமும், மன உறுதியும், பேராவலும் உள்ளோரை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மேற்சொன்ன 'தாந்த்ரோக்த தனலக்ஷ்மி உபாசனை' வழங்க இருக்கிறேன். காரணம் சாதகர் சரி வர இல்லையெனில், உபதேசம் செய்தவரையும் சேர்த்து தண்டிக்கும் சக்தியை பெற்றது அந்த உபாசன மந்திரம். மேல் விவரங்கள் விரைவில்..
ஹரி ஓம் தத் சத்
தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com