நம் ரிஷிகளும், மஹான்களும் தங்களுக்கு தகுந்த ஞானத்தை கொடுத்து அருள தக்ஷ்ணாமூர்த்தியையே வழிபட்டு வந்தனர். கல்வியில் வெறும் தேர்ச்சியை மட்டும் கொடுக்காமல் அவை என்றும் மறக்காத வண்ணம், ஒரு ஞானமாய் மாற்றி அருள்வதில் அவருக்கு நிகர் வேறு எவருமில்லை. கல்வியில் இஷ்டமில்லாத குழந்தைகள் / மாணவர்கள், இஷ்டம் இருந்தும் படிப்பு ஏறாமல் சிரமப்படுவோர், நன்றாக படித்தும் பரிட்சை நேரத்தில் மறந்து குறைந்த மதிப்பெண் எடுப்போர், அரசு வேலைக்கு படித்து பரீட்சை எழுத காத்திருப்போர், உயர் படிப்பிற்காக காத்திருப்போர், வேலையில் உயர் பதிவுக்காக காத்திருப்போர், மேலும் ஆசிரியர்கள் என அனைவரும் இவரை வழிபட்டு வர, மிக சிறந்த முறையில் மேல் நிலையை அடையலாம். இவற்றை மனதில் கொண்டும், மாணாக்கர்களுக்கு வரவிருக்கும் இறுதி தேர்வை மனதில் கொண்டும், இந்த மாதம் முதல் மார்ச் மாதம் வரை தொடர்ச்சியாக மாதமொருமுறை 'மேதா தக்ஷிணாமூர்த்தி ஹோமம்' நடத்த திட்டமிட்டுள்ளோம். அனைவரும் கலந்து கொள்ளும் வண்ணம் வார இறுதியில், விடுமுறை நாளில் நடத்த எண்ணம். அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு தக்ஷிணாமூர்த்தி அருளை பெற்று செல்ல தயாராக இருக்கவும். மேல் விவரங்கள் விரைவில்.
ஹரி ஓம் தத் சத்
தாந்த்ரீக ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.yantramantratantra.com