கடகம் : சுய வெளிப்பாடு அதிகரிக்கும் நேரமிது. அனைவரிடமும் சுயநலமின்றி பழகும், உதவும் மனப்பான்மை மேலோங்கும். தைரியம் அதிகரிக்கும். புதிய உறவுகள் மற்றும் உறவினர்களுடன் அன்னியோன்னியம் ஏற்படும். குழந்தைகளால் பெருமை தேடி வரும். சுயத்தை அறியும் , உணரும் காலமிது. பன்னீர் ரோஜாவினை கொண்டு முருகரை வியாழக்கிழமைகளில் அர்ச்சித்து வழிபடவும்.

சிம்மம் :வீட்டை புதுப்பித்தல், புதிய வீட்டிற்கு குடிபுகுதல், வீட்டில் உள்ளோருடன் அன்னியோன்னியம் போன்றவை நிகழ கூடிய காலமிது. இக்காலத்தில் செய்யப்படும்  சொத்துக்களில் முதலீடு , நன்கு பலனளிக்கும். வீட்டிற்கு செல்லவே பிடிக்கவில்லை என கூறுவோர், இக்காலங்களில் அந்நிலை மாறுவதை கண்கூடாக காணலாம். தன்நம்பிக்கை அதிகரிக்கும் காலகட்டம். தன்னை உணர்ந்து இக்காலத்தை உபயோகிக்க நன்மைகளை பன்மடங்காக்கலாம். அரச மரம் நடுதல், அரசமரத்திற்கு நீர் ஊற்றி வருதல் இக்காலங்களில் நன்மைகளை அதிகரிக்க செய்யும்.

கன்னி : பல இடங்களில் இருந்தும் புதிய நட்புகள் மற்றும் தொடர்புகள் ஏற்படக்கூடிய காலகட்டம். கல்வி மற்றும் உயர்கல்வி, புதிய பயிற்சிகளை கற்றுணர உகந்த நேரம். சகோதர சகோதரிகளால் நன்மைகள், பண உதவி மற்றும் வேறு வகை நன்மைகள் வந்து சேரும். வெளியுலகை பற்றிய உங்களின் பார்வையும் புரிதலும் விரிவடையும். எதிர்கால திட்டங்களை தீட்ட இக்காலகட்டம்  உதவும். அளவுக்கு மீறிய செயல்களை அவசரப்பட்டு ஏற்றுக்கொண்டால் முடிக்க பாடுபட வேண்டிவரும். பறவைகளுக்கு ஊறவைத்த அத்திப்பழத்தை நன்கு இடித்து,  தினசரி இட்டு வர, வாழ்கை வளமாகும்.

ஹரி ஓம் தத் சத்

ஸ்ரீ.வாமனன் சேஷாத்ரி
ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்
ஜோதிஷ தாந்த்ரீக தீர்வுகள்
9840130156 / 8754402857
www.youtube.com/amanushyam 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!