PANAM VARA MANTHIRAM IN TAMIL



PANAM VARA MANTHIRAM IN TAMIL | WEALTH MANTRA IN ENGLISH | VAMANAN SESHADRI TIPS


பணம் வர மந்திரம் | செல்வம் வர மந்திரம் | PANA VARAVU MANTHIRAM என்கிற தலைப்பில் இன்று வெளிவந்துள்ள விடீயோவிற்கான மந்திரம். இதை முழுதும் படித்து விட்டு பின்னர் மந்திர உபாஸனையை தொடரவும். மற்ற பல மந்திரங்களுக்கான முறைகளை லகுவாக (எளிதாக) அதன் வீரிய சக்தி குறையாத வண்ணம் பாமர மக்களும் பண வசதியே இல்லாத மக்களும் கூறி பயன் பெற நாம் கொடுத்து வருவது உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது மிக அதி வீர்ய சக்தி கொண்ட "ஸ்ரீ வித்யா கணபதி வாஞ்சா கல்பலதா" மந்திரமாகும். இதை இறைக்க கூடாது. மிகுந்த பக்தி மற்றும் சிரத்தை கொண்டு வீடியோவில் கூறப்பட்டுள்ள முறைப்படி இதை செய்தால் பலன் வாழ் நாள் முழுதும் கிட்டும். 

 ஏற்றம் தரும் ஏறு சிங்கி மூலிகை பணம் வர மூலிகை 

ஒரு முறை கூறினால் 444 முறை மகா கணபதி மந்திரம் கூறிய பலன் என கூறப்பட்டுள்ள மந்திரமாகும் இது. இந்த மந்திரத்திற்கு நீங்கள் மட்டுமே பொறுப்பு. வேறு நபர் ஈடுபாடு மற்றும் பணச்செலவு இதற்கு கிடையாது.வழக்கமான பூஜை முறைக்கு ஆகும் செலவு மட்டுமே. அதுவும் உங்கள் வசதிக்கு ஏற்றபடி செய்து கொள்ளவும். 

லட்ச லட்சமாய் பணம் சேர மந்திரம் | Manthiram | Vamanan Seshadri Tips


தினசரி 108 கூறுவோர் மோதகம் அவ்வப்பொழுது நிவேதனம் செய்தால் பலன் கூடும்-அருகம்புல் கட்டாயம் தேவை. அது நீங்கள் 44 முறை கூறினாலும் சரி-108 முறை கூறினாலும் சரி, இல்லை வாழ்நாள் முழுத்திற்கும் சித்தி செய்து கொள்ள கூறப்பட்டுள்ள முறைப்படி செய்தாலும் சரி-அருகம்புல் இரண்டாவது சாற்றி வழிபடவும்-எருக்கம் மாலை போட முடிந்தால் போடுவது சிறப்பு. சிலர் விடியோவை அரைகுறை மற்றும் அவசர உணர்வோடு பார்த்து கேள்விகள் கேட்பது வழக்கம். ஒரு முறைக்கு இரண்டு மூன்று முறை கேட்டு உச்சரிப்பினை நன்றாக உள்வாங்கி கொண்டு மந்திரத்தை ஆரம்பிக்கவும்.எம் அனுபவத்தில் இதை ஆரம்பித்தோர் வாழ்க்கை கிடுகிடு உயரத்தில் சென்றதை கண்டுள்ளோம்.

இதை நெற்றியில் வைத்தால் சர்வ வசீகரம் | பணம் பெருக பணம் வர

கேட்டதை கொடுக்கக்கூடியது, செல்வம் வளம், வசீகர சக்தி, புத்ர பிராப்தி, ஆயிரம் வேத ப்ராஹ்மணர்களுக்கு அன்னமிட்ட பலன் போன்றவை இதனால் வந்து சேர்வது உறுதி. இதை சித்தி செய்பவர்கள் சித்தி செய்து முடித்த மறுநாள் தாங்களே பத்தில் ஒரு பங்கு மந்திரம் ஹோமம் செய்ய வேண்டும். இதை 45 நாட்கள் கூறுவோர் 40 நாட்கள் முடியும் சமயம் இதே பதிவில் கம்மெண்ட்டில் பதிவிட்டால் அவர்களுக்கு மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பது தெரிவிக்கப்படும். 

சித்தி செய்வோர் மற்றும் தினசரி 108 கூறுவோர் அசைவம் தவிர்ப்பது கட்டாயம். 

Click To See the Instructions of Pooja method in Video (Tamil)

பூஜை முறை அடங்கிய வீடியோவை முழுமையாக காண இங்கே க்ளிக்கவும் 



SRI VIDYA GANAPATHI VANCHA KALPALATHA

 

OM SHREEM HREEM KLEEM GLAUM GAM 

AIM KA E I LA HREEM

TAT SAVITURVARENYAM

GANAPATHAYE |

KLIM HA SA KA HA LA HREEM

BHARGO DEVASYA DHIMAHI 

VARAVARADHA |

SAUH SA KA LA HREEM

DHIYO YO NAH PRACHODHAYADH 

SARVAJANAM ME VASAMANAYA SWAHA ||


ஸ்ரீவித்யா கணபதி வாஞ்சா கல்பலதா மந்திரம் 


ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம் 

ஐம் க இ ஐ ல ஹ்ரீம் 

தத் ச விதுர்வரேண்யம் 

கணபதயே |

 க்லீம் ஹ ச க ஹ ல ஹ்ரீம் 

பர்கோ தேவஸ்ய தீமஹி 

வரவரத  | 

சௌ ச க ல ஹ்ரீம் 

தியோ யோன ப்ரசோதயாத் 

சர்வஜனம்மே வசமானய ஸ்வாஹா ||


1 Comments

புருஷோத்தமன் : கணபதி ஹோமம் செய்வதற்கு தேவையான வறட்டி அரசங்குச்சி வாங்கி கொள்ளவும். பூர்ணாஹுதியில் கையளவு அருகம்புல் சேர்ப்பது நன்று. மற்றபடி வழக்கமான பூஜை சாமான்கள் மட்டும் போதும். ஹோமம் தாங்கள் தான் செய்ய போகின்றீர்கள்-தட்சிணை எதுவும் இல்லை. மோதகம் முடிந்தளவு நிவேதனம் செய்வது மிக சிறப்பு. சனிக்கிழமை மாலை 6 மணி வரை பூச நட்சத்திரம் ஆதலால் முடிந்தால் அந்த நேரத்திற்குள் ஹோமம் செய்வது நன்று. இல்லையேல் வசதிப்படி செய்யவும். ஹோமம் முடிந்த நாளன்று பசுவுக்கு ஏதேனும் உணவு கொடுத்தால் நலம்.
Previous Post Next Post

Get in touch!