ethiri thollai neenga pariharam


ETHIRI THOLLAI NEENGA PARIHARAM | எதிரி தொல்லை நீங்க பரிகாரம் 

பணம் ஒன்று மட்டும் இருந்தால் எந்த பிரச்சனையையும் எதிர் கொள்ள முடியும் என்று எல்லோரும் நினைப்பது சகஜம்.யோசித்துப்பார்த்தால் இது முற்றிலும் உண்மை என்று சொல்லிவிட முடியாது.அப்படிப்பட்ட ஒன்றை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

எதிரி தொல்லை

ஆம். சற்றே சிந்தித்துப் பாருங்கள் தொழிலில், வேலையில், அக்கம்பக்கத்தில், உறவுக்குள் எத்தனை எத்தனை  தொல்லைகள்.எல்லாவற்றையும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற ரீதியில் கையாள முடியாதல்லவா?

யாரென்று தெரிந்தும், தெரியாமலும், அப்பப்பா என்னென்ன தொல்லைகள்.என்னவாவதுசெய்யணும் இவர்களை என மனம் வேகம் கொள்ளும். விவேகமோ பொறுமை என எச்சரிக்கை செய்யும்.ச்சே என்னடா இது அவஸ்தை என்று பொருமிக் கொண்டு... இவனுங்கள ஏதாவது பண்ணும் டா (எல்லாம் மனதுக்குள் தான்) என்று துடிக்கிறீர்களா?

 ஏற்றம் தரும் ஏறு சிங்கி மூலிகை பணம் வர மூலிகை 

"செஞ்சிடுவோம்" வாங்க !!

தப்பு பண்ணிட்டேன் மன்னிச்சிடுன்னு கேட்கணுமா? இல்ல வருந்தி கண்ணீர் விடணுமா? வருந்தணுமா/திருந்தி வந்து சேருமா?

அட!  இத்தனை வழியிருக்கா(options) என்று நினைக்கிறீர்களா?

One more option for you

தங்கம் வாங்க நல்ல நாள் ஆகஸ்ட் 2021 |  THANGAM VANGA NALLA NAAL AUGUST 2021

ஆளைவிட்டா போதும் சாமி என்றாலூம் சரி.ஒருகை பார்த்து விடலாம்.விஷயம் சிம்ப்பில் தான்.இதை செய்வதால் அந்த நபருக்கு உடல் ரீதியாகவும் அல்லது மன ரீதியாகவும் எந்த விதமான தீய பாதிப்புகளும் ஏற்படாது.கவலை வேண்டாம்.

ஒரு செவ்வாய் கிழமை பகல் நேரத்தில் அல்லது சனிக்கிழமை இரவு 9-10மணிக்குள் உங்கள் வசதியான   நாளில் இதை ஒரு முறை செய்தால் போதும்.

தேவை மூன்றே பொருட்கள்

1.ஒரு சிறிய கருப்பு நிற டப்பா .

சிறிய 2.பெருங்காயக்கட்டி-1

3.வெள்ளை நிற பிளெய்ன் பேப்பர்/( plain white paper)

மெழுகுவர்த்தி (செவ்வாய் கிழமைக்குமட்டும்)

முதலில் எந்த  விதமான தொந்தரவுகளும் இல்லாமல் (செல்போன், காலிங்பெல் இன்னபிற விஷயங்களை தவிர்த்து) எந்த நபரை நீங்கள் எந்த வகையில் அவர்கள் மாறவோ அல்லது விலக்கவோ உங்கள் எண்ணப்படி என்ன செய்வது என்று மனதில் முடிவு செய்யுங்கள்.

 கடன் அடைக்க உகந்த நாள் ஆகஸ்ட் 2021 

 அதற்கான காரண காரியங்களை  மனதில் அசைபோட்டு( rewind) செய்துகொண்டுவிட்டு செவ்வாய் கிழமை பகல் நேரத்தில் ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதனருகில் அமர்ந்து வலது கையில் பெருங்காயகட்டியை எடுத்து வெள்ளை நிற பிளெய்ன் பேப்பரில் அவர் பெயர் எழுதி, அந்த பபெருங்காயக்கட்டியையும் அதன் மேல் வைத்து பேப்பரை மடித்து கருப்பு நிற டப்பாவில் வைத்து மண்ணில் புதைத்துவிடுங்கள்.(வீட்டில் பூச்செடி தொட்டிக்குள் புதைக்கலாம்). இதை சனிக்கிழமை இரவு 9-10 மணியளவில் குளியலறையில் செய்யவேண்டும் அவ்வளவுதான்.

இதை ஆண் பெண் இருபாலரும் செய்யலாம்.எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை.ஒரு முறை ஒரு நபரை மட்டும் தான் நினைத்து செய்யவேண்டும்.

 சக்தி வாய்ந்த சுக்ர மணியின் பலன்கள் SHUKRA MANI BENEFITS IN TAMIL 

வெவ்வேறு நபர்கள் எனில் அடுத்தடுத்த கிழமைகளில் செய்யலாம்.ஒரே முறை போதும்.ஒருவேளை முழுமையான பலன் கிடைக்கவில்லை என்று நீங்கள் கருதினால் 2-3 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் செய்யலாம்.ஒருவேளை நீங்கள் தேர்ந்தெடுத்த அந்த நாளில் ஏதாவது இடையூறு ஏற்பட்டால்  பலன் தராது.அந்த நாளைவிடுத்துவேறு ஒரு நாளில் செய்வது நல்லது.பிரச்சனைகள் தீர்ந்தும் டப்பாவை வெளியில் குப்பை தொட்டியில் போட்டு விடலாம்.செய்து மன அமைதி பெறுங்கள்.வாழ்த்துக்கள்.


நன்றி : தமிழில் வடிவாக்கம் : ஸ்ரீமதி.நிர்மலா 

Post a Comment

Previous Post Next Post

Get in touch!